Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் | வரலாறு - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

1929 இல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.

பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியிலும் தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.

இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது அரங்கேறியது.

புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

 

2. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக் கொண்டன.

 

3. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?

1922 அக்டோபரில் முசோலினி பாசிஸ்டுகளின் ரோமாபுரியை நோக்கிய மாபெரும் அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்.

முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.

 

4. 1884-85 இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.

காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆங்கிலேயருக்கும், தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.

 

5. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும், உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.

எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.

 

6. டாலர் ஏகாதிபத்தியம்” - தெளிவுபட விளக்குக.

இச்சொல் தொலைதூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும் தக்கவைத்துக் கொள்ளவும் அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையாகும்.

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்