Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.

அரசியலமைப்பு வழிமுறையில் நம்பிக்கை கொண்டிருத்தல்

அவைக் கூட்டங்களை நடத்துதல்.

பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுதல்.

தங்கள் கண்ணோட்டங்களை மொழி நடையில் வேண்டுகோள் மூலம் மனுக்கள் அளித்தல்.

குறிப்பாணை மூலம் அரசுக்கு சமர்ப்பித்தல்.

ஆங்கிலேயர்களின் காலனியச் சுரண்டலை அம்பலப்படுத்துதல்.

 

2. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.

திருநெல்வேலி தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதில் வ.. சிதம்பரனார் சுப்பிரமணிய சிவாவுடன் ஒத்துழைத்தார்.

ஆங்கில அரசு இவர்கள் இருவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனை எதிர்த்து திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.

காவல்நிலையங்கள், நீதிமன்ற-நகராட்சி அலுவலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

ஆங்கிலேய காவலர்கள் துப்பாக்கி சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

 

3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?

அன்னிபெசன்ட் அம்மையார் தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல நியூ இந்தியா, காமன் வீல் என இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

1910 பத்திரிகை சட்டத்தின்படி பெருமளவு பிணைத்தொகையை செல்லுத்தியவர்.

பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களை தமது இயக்கத்தில் சேர்த்தவர்.

• ‘அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட  சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது' எனக் கூறியவர்.

இந்தியர்களுக்கு தன்னாட்சி கிடைக்க அரும்பாடுபட்டவர்.

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்