தாவரத்தின்
தண்டுநுனியானது ஒளிச்சார்பசைவை
கொண்டது என்று விளக்கும்
சோதனை
ஒளிபுகாத ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிறிய துவாரத்தினை ஏற்படுத்தி அதன் வழியே ஒளியானது அட்டைப் பெட்டியினுள் விழுமாறுச் செய்ய வேண்டும். பின்னர் நன்கு நீருற்றப்பட்ட தொட்டித் தாவரம் ஒன்றை அந்த அட்டைப் பெட்டியினுள் வைக்க வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒளிச்சார்பசைவு அறை அல்லது ஒளி நோக்கிய சாய்வு அறை என்று பெயர். இந்த அமைப்பில் உள்ள ஒளி ஊடுறுவும் துளையை 24 மணி நேரம் மூடி வைத்தால் தாவரமானது சாதாரண வளர்ச்சி நிலையை காட்டுகிறது. ஆனால் ஒளியானது அட்டைப் பெட்டியினுள் விழுமாறுச் செய்தால் தாவரமானது ஒளிவரும் திசையை நோக்கி வளைந்து வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் நாம் தாவரத்தின் தண்டு நுனியானது ஒளிச்சார்பசைவை உடையது என்பதை அறியலாம்.
