தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 2 Unit 2 : Physical Features of Tamil Nadu

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. பின்வருவனவற்றுள் எந்த வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ளது?

அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

ஆ) கார்பெட் தேசிய பூங்கா

இ) சுந்தரவன தேசிய பூங்கா

ஈ) ரந்தம்பூர் தேசிய பூங்கா

விடை: அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

 

2. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் -----------------------

அ) ஆரவல்லி மலைத்தொடர்

ஆ) நீலகிரி மலைகள்

இ) இமய மலைத்தொடர்

ஈ) விந்திய மலைத்தொடர்

விடை: ஆ) நீலகிரி மலைகள்

 

3. மரங்களின் உச்சிக் கிளைகள் இணைந்து ஒரு சங்கிலி போல உருவாவதற்கு ------------ என்று பெயர்.

அ) சூரிய ஒளி

ஆ) விதானம்

இ) காடு

ஈ) சதுப்புநிலம்

விடை: ஆ) விதானம்

 

4. தமிழ்நாட்டில் -------------------------- நிலவுகிறது.

அ) அதிகபட்ச குளிர்

ஆ) அதிகமான மழைப்பொழிவு

இ) வெப்பமண்டல காலநிலை

ஈ) பனிப்பொழிவு

விடை: இ) வெப்பமண்டல காலநிலை

 

5. ------------------ அதிக மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும்.

அ) இலையுதிர்க் காடுகள்

ஆ) சதுப்புநிலைக் காடுகள்

இ) பசுமை மாறாக் காடுகள்

ஈ) இவற்றில் ஏகவுமில்லை

விடை: இ) பசுமை மாறாக் காடுகள்

 

 

உ பொருத்துக


1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் - பாம்பன் பாலம்

2. சுருளி அருவி - மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

3. இந்தியாவின் முதல் கடற்பாலம் - தேனி

4. பிச்சாவரம் - இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – அலையாத்திக்காடுகள்

 

விடை:

1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் - மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

2. சுருளி அருவி – தேனி

3. இந்தியாவின் முதல் கடற்பாலம் - பாம்பன் பாலம்

4. பிச்சாவரம் - அலையாத்திக்காடுகள்

5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

 

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

 

1. தமிழ்நாடு இந்தியாவில் பதினோராவது மிகப்பெரிய மாநிலம் ஆகும். விடை : சரி

2. தமிழ்நாடு இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. விடை : தவறு

3. குறிஞ்சி மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும். விடை : தவறு

4. தமிழ்நாடு ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டுள்ளது. விடை : சரி

5. இலையுதிர்க் காடுகள் இலைகளை உதிர்ப்பதில்லை. விடை : தவறு

 

IV. குறுகிய விடையளி.


1. தமிழ்நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களைப் பட்டியலிடுக.

வடக்கே ஆந்திரப்பிரதேசம்

வடமேற்கே கர்நாடகா

மேற்கே கேரளா

 

2. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு எத்தனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், கடற்கரை.

 

3. தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சமவெளிகள் யாவை?

• ஆற்றுச் சமவெளிகள்

• கடற்கரைச் சமவெளிகள்

 

4. தமிழ்நாட்டில் உள்ள அருவிகளின் பெயர்களைக் கூறுக.

• ஒகேனக்கல் அருவி

• குற்றாலம் அருவி

• சுருளி அருவி

• வட்டப்பாறை அருவி


5. தமிழ்நாட்டின் காலநிலை பற்றி விவரி

• தமிழ்நாடு வெப்ப மண்டலக் காலநிலை கொண்டிருக்கிறது.

• கோடை, குளிர்காலத்திற்கிடையே குறைந்த வேறுபாடு காணப்படும்.

• கோடையில் 40° செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

• ஆண்டுமுழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பருவகாலங்கள்

* குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி)

* கோடைகாலம் (மார்ச் - மே)

* தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் - செப்டம்பர்)

* வடகிழக்கு பருவக்காற்று (அக்டோபர் - டிசம்பர்)

 

6. பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள் - வேறுபடுத்துக.


 

 

செயல்திட்டம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புகள் சிலவற்றை நில வரைபடத்தில் குறிக்கவும்.


4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 2 : அலகு 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு