Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II

சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது

சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது. நீதிநெறியானது குடிமக்களுக்கு ஒழுக்க விதிகளை போதிக்கிறது. அதேபோல, அரசால் இயற்றப்படுகின்ற சட்டமும் இந்த லட்சியத்தை அடைய பாடுபடுகிறது.

5. சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது?

சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது. நீதிநெறியானது குடிமக்களுக்கு ஒழுக்க விதிகளை போதிக்கிறது. அதேபோல, அரசால் இயற்றப்படுகின்ற சட்டமும் இந்த லட்சியத்தை அடைய பாடுபடுகிறது.

சட்டமும் ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று மிகுந்த தொடர்புடையன ஆகும். ஒழுக்க விதிமுறைகள் என்பவை குடிமக்களின் நன்னடத்தைகளுக்கு அடிப்படையாகும். நல்லியல்பு அரசு நற்குடிமக்களை பெற்று சிறந்து விளங்குகிறது. நல்லியல்பற்ற அரசானது, ஒழுக்கம் தவறிய குடிமக்களைப் பெற்று சீரழியும். அரசின் உயிர்மூச்சான செயல்பாடாக "நீதி நெறிகள்" விளங்குகின்றன

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

‘'தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும். அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்றபோது, ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்". - பிளாட்டோ (Plato)

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

நீதிநெறியானது நல்லியல்பு கடமைகளைப் பற்றியது, ஆனால் அரசால் இயற்றப்படும் சட்டமோசட்டக் கடமைகளை பற்றியதாகும்.


சட்டத்திற்கும் நீதிநெறிக்கும் உள்ள வேறுபாடுகள் (The Distinction between Law and Morality)

சட்டத்தின் கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்

சமூக விதிகளையும், சமூக நீதிநெறிகளையும் மதியாதவர்களுக்கு சமூக புறக்கணிப்பு என்பதே மாபெரும் தண்டனையாக அமைகிறது

நீதிநெறி என்பது மனிதர்களின் அக மற்றும் புற நடவடிக்கைகள் தொடர்புடையதாகும். ஆனால் சட்டமோ மனிதர்களின் புற நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையதாகும். இதனாலேயே மனிதர்கள் தங்கள் புற நடவடிக்கைகளின் மூலம் சட்டத்தை மீறும்போது, தண்டிக்கப்படுகிறார்கள்.

பொதுக் கருத்து

பொதுவான நலனுக்கான மக்களின் கருத்தாகும்.

நீதிநெறி என்றால் என்ன?

சமூக எதிர்மறைகளான மது, சூது, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, போன்றவைகளை கட்டுப்படுத்தும் சமூக உறுப்புகள் நீதிநெறி எனப்படுகிறது. நீதிநெறிகள் தொடர்பான சட்டங்கள் எப்போதும் நிலையானவைகளாகும்.

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II