வரலாற்றை நோக்கி | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 1 Unit 2 : Towards History

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : வரலாற்றை நோக்கி

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : வரலாற்றை நோக்கி : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1 பழங்கற்கால மனிதர்கள்,

அ) பருத்தி ஆடைகள் அணிந்தனர்.

ஆ) கம்பளி ஆடைகள் அணிந்தனர்.

இ) விலங்குகளின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.

விடை: ஆ) விலங்குகளின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்

 

2. மனிதர்களின் முதல் செல்லப் பிராணி, --------------- ஆகும்.

அ பசு

ஆ) குதிரை

இ) நாய்

விடை: இ) நாய்

 

3. பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.

அ) இரும்பு

ஆ) செம்பு

இ) தங்கம்

விடை: ஆ) செம்பு

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. பழங்கால மனிதன் வாழ்ந்த இடம் குகைகள் மற்றும் மரப் பொந்துகள்

2. கற்காலம் என்பது கற்களை பயன்படுத்திய காலமாகும்.

3.  கற்களால் நெருப்பு உருவாகப்பட்டது.

4. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.

5. புதிய கற்காலத்தின் இறுதியில் ________ கண்டுபிடிக்கப்பட்டது

6. இரும்புக்கருவிகளைப் பயன்படுத்திய காலம் இரும்புக்காலம்

7. வரலாற்று ஆராய்ச்சி நடைபெறும் ஒரு தமிழக இடம் கீழடி

 

 

III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

 

1. கற்காலம் என்றால் என்ன?

• கற்கருவிகளும் ஆயுதங்களும் கடந்த காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டன.

• மனிதர்கள் வேறு உலோகங்களை அறிந்திருக்கவில்லை.

• கற்கருவிகளைக் கண்டுபிடிக்கவே பல ஆண்டுகள் ஆனது.

• இக்காலகட்டத்தில் மனிதர்கள் எழுத்து வடிவங்களை அறிந்திருக்கவில்லை.

• குவார்ட்சைட் எனும் ஒருவகைக் கல்லைக் கொண்டு கருவிகளும் ஆயுதங்களும் செய்தனர்.

• இக்காலத்தை கற்காலம் என்கிறோம்.

 

2 நாடோடி வாழ்க்கைப் பற்றி சிறுகுறிப்பு வரைக்,

 

3 புதுக்கற்காலக் காலம் வரையறு

• எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை மூலம் கருவிகளும், ஆயுதங்களும் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

• வரலாற்றில் இதனையே புதிய கற்காலம் என்று அழைக்கின்றோம்.

• இதன் காலகட்டம் 10000 முதல் 4000 முடிய பொது ஆண்டுக்கு முன்பு உள்ள காலமாகும்.

 

4 மண்பாண்டம் பற்றி சிறுகுறிப்பு வரைக,

5. அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில் சிலவற்றை கூறும்.

 

6. எந்தக்காலத்தில் கல்லும் தாமிரமும் பயன்படுத்தப்பட்டன?

• புதிய கற்காலத்தின் இறுதியில் கல்லும், தாமிரமும் மற்றும் செம்பும் பயன்படுத்தப்பட்டன.

• இது செம்புக்காலம் என அழைக்கப்படுகிறது.

• செம்பு, துத்தநாகம், வெள்ளி ஆகியவை ஒன்றாகக் கலந்து பயன்படுத்தப்பட்டன.

 

7. வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் யாவை?

• வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் நாணயங்கள், கல்வெட்டுகள், சிலைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் மற்றும் எழுதப்பட்ட ஆவணங்கள் போன்றவைகளாகும்.

•நாணயங்கள் அக்காலத்து அரசர்களின் காலம், பொருளாதாரநிலைபற்றி அறிய உதவுகின்றன.

• கல்வெட்டுகள் என்பது அரசரின் ஆட்சிக்காலம், மக்களின் சமுதாய நிலைபற்றி பாறைகளில் பொறிக்கப்பட்டவைகளாகும். இவை பெரும்பாலும் கோவில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.

 

8. அருங்காட்சியகம் என்றால் என்ன?

•அருங்காட்சியகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரிய பொருட்களைப் பாதுகாக்கும் இடம்.

• இவை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. எனவே கடந்த காலத்தின் எச்சங்களைப் பாதுகாப்பது அவசியம்.

• எச்சங்கள் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய பூமியில் புதையுண்ட பொருட்களைக் குறிப்பதாகும்.

• இவைகளை அருங்காட்சியகங்களின் மூலம் பார்காப்பதால் கடந்த கால வரலாற்றை அறிய முடிகிறது.

 

9. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

வரலாற்றுக்கு முந்தைய காலத்தைக் கீழ் கண்டவாறு வகைப்படுத்தலாம்.

• பழங்கற்காலம் - 10000 பொ.ஆ.மு.  

• இடைக்கற்காலம் - - 8000 பொ.ஆ.மு.

• புதியகற்காலம் 10000 முதல் 4000 வரை பொ.ஆ.மு.

• செம்புக்காலம் - 3000 முதல் 1500 வரை பொ.ஆ.மு.

• இரும்புக்காலம் 1500 முதல் 600 வரை பொ.ஆ.மு.

 

10. பழங்கற்கால கருவிகளை வகைப்படுத்துக. 

• கோடரி - எலும்பாலான ஆயுதம்

• ஈட்டி - சுத்தியல்

• கத்தி - ஆப்பு 

• அரிவாள் - கூர்மையான கற்கருவிகள்

• சக்கரம் - கொம்புகள் 

• மண்பானை - மரங்களின் கிளைகள், குச்சிகள்

• ஆபரணங்கள் போன்ற கருவிகளை பழங்கற்காலத்தில் பயன்படுத்தினர்.

 

11. செம்புக்காலம் என்றால் என்ன?

• புதிய கற்காலத்தின் இறுதியில் செம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

• இக்காலகட்டத்தில் கல்லும் செம்பும் பயன்படுத்தப்பட்டன.

• இதனையே செம்புக்காலம் என்கிறோம்.

 

12. வரலாற்றில் சக்கரம் பற்றிக் கூறுக.

• பழங்கால மனிதர்களின் முதல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.

• முதலில் கல்லாலும் பின்னர் மரத்தாலும் செய்தனர்.

• சக்கரத்தின் மூலம் பயணத்தையும், வேலைகளையும் எளிதாக்கினர்.

• அதன்பின் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தனர்.

 

 

V. விரிவான விடையளிக்க.


1 கற்காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

2 புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலம் பற்றி எழுதுக.

 

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : வரலாற்றை நோக்கி