Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மீள்பார்வை - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

வரலாறு - மீள்பார்வை - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

மீள்பார்வை - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

மீள்பார்வை

வேளாண்மை உற்பத்தி, திணைகளுக்கிடையே மக்கள் கொண்ட சமூக உறவு, கடல்கடந்த வணிகம் போன்றனவற்றால் நகரவாழ்க்கை மலர்ந்தது. பண்பாடு செழித்தது. இலக்கியங்கள் தோன்றின.

தமிழ்ச் சங்கம் வழியாக இலக்கியங்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன.

தொல்காப்பியம் விவரித்துள்ள திணைமுறை தமிழகத்திற்கே உரிய வாழ்வுமுறையாகும்.

பழங்குடி மக்கள் வாழ்வுமுறையிலிருந்து மன்னர் ஆட்சிக்கு சமூகம் மாறத் தொடங்கியது சங்க காலத்தில்தான்.

இந்தியப் பெருங்கடற் பகுதிகளில் கடல்வழி வணிகம் வளர்ந்தது.

செங்கற் கட்டுமானங்களைக் கொண்ட பெரிய நகரங்கள் தமிழ்நாட்டில் தோன்றின

சமூக அமைப்பு பலவாறாக வேறுபட்டிருந்தது.

 

காலக்கோடு

ஏறத்தாழ கி.மு. (கி.மு. (பொ..மு.) 1300 - கி.மு. (பொ..மு.) 300 வரை - இரும்புக்காலம்/பெருங்கற்காலம்

ஏறத்தாழ கி.மு. (பொ..மு.) 300 - பொ.. 300 வரை. இதற்கு முன்னரும் தொடங்கியிருக்கலாம் - பண்டைய வரலாற்றுக் காலம்/சங்க காலம்

ஏறத்தாழ கி.மு. (பொ..மு.) 300 – பொ.. 300 வரை. - சங்க இலக்கியங்கள்

ஏறத்தாழ கி.மு. (பொ..மு.) 400 - கி.மு. (பொ..மு.) 300 வரை - தமிழ்-பிராமி எழுத்து முறையின் அறிமுகம்

பொ.. முதல் நூற்றாண்டு - எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ்

பொ.. முதல் நூற்றாண்டு - பிளினியின் இயற்கை வரலாறு

பொ.. இரண்டாம் நூற்றாண்டு - தாலமியின் புவியியல்

பொ.. இரண்டாம் நூற்றாண்டுவியன்னா பாப்பிரஸ்

ஏறத்தாழ பொ..300 - பொ.. 500 வரை - சங்கம் மருவிய காலம்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்