வரலாறு - பாலர்கள் - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms
பாலர்கள்
ஹர்ஷரின் மறைவிற்குப் பின்னர் கங்கை - யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட வடிநீர்ப் பகுதி, அதனைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டிற்கு பிரதிகாரர்கள் (ஜலோர் ராஜஸ்தான்), பாலர்கள் (வங்காளம்), ராஷ்டிரகூடர் (தக்காணம்) ஆகியோர் மத்தியில் மும்முனைப் போட்டி நிலவியது கிழக்கு கங்கைச் சமவெளியின் பரந்து விரிந்த பகுதிகளை பாலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வேளாண்மையின் மூலம் ஈட்டிய வருவாய் தவிர, பாலர்கள் தென் கிழக்கு ஆசியாவில் தங்களது வணிகத் தொடர்புகள் மூலமாகவும் வருவாய் ஈட்டினர். வங்காளத்தில் பரவியிருந்த பௌத்த மதம் கிழக்கு இந்தியாவிற்கும் ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இணைப்பாக விளங்கியது