ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி - வரலாறு - ராஷ்டிரகூடர்கள் | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms
ராஷ்டிரகூடர்கள்
பிரதிகாரர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடையில் நிலவிய பகைமை இரு வம்சங்களின் அழிவிற்கு வழிவகுத்தது. கன்னோசிக்கு வருகை தந்த அரபுப் பயணி அல் மாசூத் அரசாளும் இரு வம்சங்களுக்கிடையில் நிலவிய பகைமையைப் பதிவு செய்துள்ளார். ராஷ்டிரகூடர்கள் பிரதிகாரர்களிடமிருந்து கன்னோசியைக் கைப்பற்றுவதற்குத் தக்க சமயத்தை எதிர் நோக்கியிருந்தனர். பொ.ஆ. பத்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் வெற்றிகரமாக அரசாண்டனர். அவர்கள் கன்னட மொழி பேசும் பகுதியில் வாழ்ந்த முக்கியப் பிரிவாக அறியப்பட்ட ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டனர். அசோகரின் கல்வெட்டுகளிலும் அவர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.