Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல: கேள்விகள் மற்றும் பதில்கள்

உடுமலை நாராயணகவி | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல: கேள்விகள் மற்றும் பதில்கள் - உடுமலை நாராயணகவி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல்  – 1 : கவிதைப் பேழை : ஒன்றல்ல இரண்டல்ல)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ----------

அ) கலம்பகம்

ஆ) பரிபாடல் 

இ) பரணி 

ஈ) அந்தாதி

 [விடை : இ. பரணி]


 2. வானில் ----------- கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில் 

ஆ) முகில் 

இ) துகில் 

ஈ) துயில் 

[விடை : ஆ. முகில்] 


3. “இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  ----------

அ) இரண்டு + டல்ல

ஆ) இரண் + அல்ல 

இ) இரண்டு + இல்ல

ஈ) இரண்டு + அல்ல

 [விடை : ஈ. இரண்டு + அல்ல]


4. ‘தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------- 

அ) தந்து + உதவும்

ஆ) தா + உதவும் 

இ) தந்து + தவும்

ஈ) தந்த + உதவும் 

[விடை : அ. தந்து + உதவும்]


5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) ஒப்புமைஇல்லாத

ஆ) ஒப்பில்லாத 

இ) ஒப்புமையில்லாத

ஈ) ஒப்புஇல்லாத

 [விடை : இ. ஒப்புமையில்லாத] 


குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

❖ தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும். 

❖ சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.

❖ தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும். 


2. 'ஒன்றல்ல இரண்டல்ல' - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக. 

❖ முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி. 

❖ புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.


சிறுவினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? 

❖ பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம். 

❖ பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் - ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார். 


சிந்தனை வினா 

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன? 

சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது. 

கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின. 

தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன. 

குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது. 

எனவே, தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.


கற்பவை  கற்றபின்  


1. தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக. 

1. தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம். 

அதியன் (ஔவைக்கு உதவியவன்)

யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறு தொகுப்பித்தவன்) 

பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்) 

பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்) 

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்) 

சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்) 

சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்) 

சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்) 


2. தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக. 

கீழ்க்கணக்கு

மேல்கணக்கு

அறஇலக்கியம்

பெருங்காப்பியம்

சிறு காப்பியம்

சிறுகதை 

மரபுக்கவிதை 

புதுக்கவிதை 

புதினம் 

நாட்டுப்புற இலக்கியம்


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்