சுற்றுச்சூழல் பொருளியல் - மரம் வளர்த்தல் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
மரம் வளர்த்தல்
மரங்கள் உயிரிக் (Oxygen) காற்றை அளித்து காற்றின் பண்பை உயர்த்துகின்றது. தண்ணீர், மண்வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வனவிலங்குகளுக்கு உதவியாக உள்ளது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது கரியமில வாயுவைக் கிரகித்து நாம் சுவாசிக்கும் உயிரிக் காற்றை வெளியிடுகின்றது. எனவே மரங்கள் பூமியின் நுரையீரல் எனப்படுகின்றது. இயற்கைக் காடுகளும் மரத்தோட்டங்களும் மழைநீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்கின்றது.