Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தண்டின் பண்புகள்

தாவரவியல் - தண்டின் பண்புகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

தண்டின் பண்புகள்

முளைக்கும் விதையின் கருவிலுள்ள முளைக்குருத்து தண்டாக வளர்கிறது.

முளைக்கும் விதையின் கருவிலுள்ள முளைக்குருத்து தண்டாக வளர்கிறது. கரு வளர்ச்சியடைந்த பிறகு மேல்முளைக் குருத்து (Epicotyl) நீட்சியுற்று நுனியில் குருத்திலைகளைத் தாங்கும் அச்சாக வளர்கிறது. இந்த நுனிப் பகுதியானது துரிதமாகப் பிரிவடையும் செல்களைக் கொண்ட நுனி ஆக்குத்திசுவைக் கொண்டுள்ளது. பின்னர் நடக்கும் செல் பிரிதலும், வளர்ச்சியும், இலைத்தோற்றுவி என்ற திசுத்தொகுப்பை உருவாக்குகின்றன. தண்டில் இலை தோன்றும் இடம் கணு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த கணுக்களுக்கு இடையேயான பகுதி கணுவிடைப் பகுதி (Internode) என்று அழைக்கப்படுகிறது.

தண்டின் பண்புகள் (Characteristic features of the stem)

1. தண்டு பொதுவாக தாவரத்தின் தரைமேல் வளரும் பகுதியாகும்.

2. நேர் ஒளி நாட்டமும், எதிர்புவி நாட்டமும் கொண்டது.

3. கணுவும், கணுவிடைப் பகுதிகளும் உடையது.

4. உடலவளர்ச்சியைத் தரும் உடலமொட்டுகளையும், இனப்பெருக்கத்திற்கான இனப்பெருக்க மொட்டுகளையும் கொண்டது. தண்டானது நுனி மொட்டில் முடிகிறது.

5. இளம் தண்டு பசுமை நிறத்தில் இருப்பதால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

6. இனப்பெருக்க வளர்ச்சியின் போது தண்டானது மலர்களையும் கனிகளையும் தாங்குகிறது.

7. கிளைகள் புறவளரிகளாகத் தோன்றுபவையாகும்.

8. சில தண்டுகள் பலவகையான பல செல் ரோமங்களைக் கொண்டிருக்கும்.

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்