உறிஞ்சப்பட்ட
நீர் வேரில் செல்லும் பாதை
நீரானது வேர்த்தூவியினுள்
சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது.
ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக
அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி
தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.
